கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதவு இல்லாத நிலையில் பெண்கள் கழிவறை இருப்பதால், அங்கு வரும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் கீழ் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இங்குள்ள பழைய கட்டடத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை உள்ளது.
இங்கு ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனிடையே, பெண்கள் கழிவறையின் முன்பக்க கதவு முழுமையாக சேதமடைந்து உடைந்து விழுந்துள்ளது.
இதனால், அங்கு வரும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கழிவறையில் புதிய கதவு பொருத்த வேண்டும் என்றும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைகளை தூய்மைப்படுத்துவதோடு, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



