கோவை: கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, தாம்பரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பவன் குமார் ரெட்டியை, கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பவன் குமார் ரெட்டி, கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.



