கோவையில் குப்பை கொட்டிய தகராறு; மூதாட்டி வெட்டிக்கொ*!

கோவை: ஆலாந்துறை அருகே குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகர் அருகே உள்ள நல்லூர்வயல் சப்பாணிமடை பகுதியை சேர்ந்தவர் ஜெசி (72). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் நோபிள் வாட்சன் (47).

Advertisement

இருவருக்கும் வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

Read news: கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இந்நிலையில், இன்று காலை ஜெசி, நோபிள் வாட்சன் வீட்டின் முன்பு குப்பை கொட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நோபிள் வாட்சன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெசியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

Advertisement

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த காருண்யா நகர் போலீசார், ஜெசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read news: கோவை அரசு மருத்துவமனை அருகே தலையில் கல்லை போட்டு முதியவர் கொ* !

மேலும், தப்பியோட முயன்ற நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை கொட்டிய தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் குல தெய்வக்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா…

கோவை: கோவை அன்னூர் அருகே குல தெய்வமான மதுர காளியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் உள்ள மதுர காளியம்மன் கோவில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...