நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே நடுரோட்டில் பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ராகவி (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை வேலை முடிந்து தனது உறவினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூர்யா நகர் காமாட்சி நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த வாலிபர் ஒருவர் ராகவி மீது வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது.

இதனை ராகவி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அவரது ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

Advertisement

இதுகுறித்து ராகவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இவர் ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...