நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே நடுரோட்டில் பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ராகவி (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை வேலை முடிந்து தனது உறவினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூர்யா நகர் காமாட்சி நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த வாலிபர் ஒருவர் ராகவி மீது வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனை ராகவி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அவரது ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து ராகவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இவர் ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

Advertisement

இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தலை, கைகளில் கட்டு- கோவை ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…

கோவை: கோவை மாநகராட்சியில் தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக தலை மற்றும் கைகளில் கட்டுடன் வந்து பொதுமக்கள் மனு அளித்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட போத்தனூர் பகுதியை சுற்றித் தெருநாய்கள் பிரச்சனை அதிகமாக உள்ளதாக கூறி...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.