கோவையில் DMK GenZ Meet Up…

கோவை: கோவையில் திமுகவின் GENZ MEET UP நிகழ்வு நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை திமுக தற்பொழுது இருந்தே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை திமுக முன்னெடுத்து வருகிறது குறிப்பாக Gen Z தலைமுறையினரை கொண்டு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது அவர்களை முன்வைத்து சமூக நீதி பெரியாரின் கொள்கைகள் அறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோர் தமிழுக்கு மக்களுக்கு ஆற்றிய சேவைகள் கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டு உள்ளது.

மேலும் GENZ DMK MEETUP என்ற நிகழ்ச்சி மூலம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இளம்பெண்களை கொண்டு ஆய்வுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் சமூகநீதி பெரியாரிசம் அறிஞர் அண்ணா கலைஞர் மு க ஸ்டாலின் ஆகியோர் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துரைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் கலந்துரையாடப்படுகின்றன.

Advertisement

இந்த நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெற்றது. சரவணம்பட்டி- துடியலூர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் பங்கேற்றனர் இதில் சமூக நீதி, தற்போதைய அரசியல் சூழல், தற்போதைய தமிழக வெற்றி கழக அரசுக்கும் முந்தைய திமுக அரசுக்கும் இருந்த வேறுபாடுகள் பற்றி கருத்துக்கள் பகிரப்பட்டன. குறிப்பாக இதில் தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சனம் செய்தும் சாடியும் பலரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இதனை பின்பற்ற வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை அனைத்து பள்ளிகளிலும் எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.