கோவை: விறகு வெட்ட சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.
கோவை அருகே விறகு வெட்டும் வேலைக்கு இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான கிருஷ்ணசாமி. இவர் விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி காலை மாங்கரை ரோட்டில் விறகு வெட்டும் வேலைக்கு சென்ற போது மரங்களுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று கிருஷ்ணசாமியை தாக்கியுள்ளது.
இதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தடாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


