கோவையில் விறகு வெட்ட சென்ற முதியவர்- காட்டெருமையால் நேர்ந்த சோகம்…

கோவை: விறகு வெட்ட சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

கோவை அருகே விறகு வெட்டும் வேலைக்கு இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான கிருஷ்ணசாமி. இவர் விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி காலை மாங்கரை ரோட்டில் விறகு வெட்டும் வேலைக்கு சென்ற போது மரங்களுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று கிருஷ்ணசாமியை தாக்கியுள்ளது.

இதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தடாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...