கோவை: கோவையைச் சேர்ந்த இரண்டு பேர் இன்று தமிழ்நாட்டின் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதலமைச்சர் விஜய் உட்பட அமைச்சர்கள் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றனர். இதனிடையே இன்று 23 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
இந்த 23 பேரில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
கோவையைப் பொறுத்தவரையில் தவெக 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக எம்எல்ஏ விக்னேஷ் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத் குமார் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் பட்டியல்


இருந்த போதிலும், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்? அமைச்சர்களை குறிப்பிட்ட மாவட்ட பிரதிநிதிகளாக அல்லாமல் தமிழகத்தின் முகங்களாகவே அடையாளப்படுத்த முயற்சிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



