கோவையில் இரண்டு அமைச்சர்கள் – முழு பட்டியல் இதோ!

கோவை: கோவையைச் சேர்ந்த இரண்டு பேர் இன்று தமிழ்நாட்டின் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

முதலமைச்சர் விஜய் உட்பட அமைச்சர்கள் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றனர். இதனிடையே இன்று 23 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

Advertisement

இந்த 23 பேரில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

கோவையைப் பொறுத்தவரையில் தவெக 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக எம்எல்ஏ விக்னேஷ் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத் குமார் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Coimbatore ministers sworn in
Coimbatore ministers sworn in

இருந்த போதிலும், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்? அமைச்சர்களை குறிப்பிட்ட மாவட்ட பிரதிநிதிகளாக அல்லாமல் தமிழகத்தின் முகங்களாகவே அடையாளப்படுத்த முயற்சிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.