கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறிய காட்டு யானைகள், ஓடந்துறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ‘பாகுபலி’ உள்ளிட்ட இரண்டு காட்டு யானைகள், ஓடந்துறை அருகே உள்ள வினோபாஜி நகர் பகுதியில் நேற்றிரவு நுழைந்தன.
பின்னர் அங்கிருந்த தனியார் தோட்டத்திற்குள் சென்ற யானைகள், மாமரத்தில் இருந்த மாங்காய்களை பறித்து சாவகாசமாக சாப்பிட்டன.
யானைகள் தோட்டப்பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காட்டு யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வீடியோ
வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் காட்டு விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


