பருவமழை முன்னெச்சரிக்கை- கோவையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் தொடக்கம்…

கோவை: பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவையில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

Advertisement

பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு அதனை எதிர்கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் பொழுது ஆங்காங்கே மழை நீர் தேங்கி விடுவதாலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாலும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அதனை தடுக்கும் விதமாக அனைத்து நீர் நிலைகளையும் சுத்தப்படுத்தி அதற்கான பாதைகளை உருவாக்குவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை வலாங்குளம் பகுதியில் படர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளானது துவங்கி உள்ளது. இயந்திரங்களைக் கொண்டு அனைத்து ஆகாயத்தாமரைகளும் அகற்றப்பட்டு வருகிறது மேலும் குளங்களில் உள்ள குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இந்த குளத்திற்கு வந்தடையும் நீர் வழித்தடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement

வலாங்குளத்தில் ஜூலை மாதம் வெளிநாட்டு பறவைகளும் அதிகமாக வரக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...