கோவையில் அம்மன் உருவத்தை பைனாகுலரில் பார்த்து வணங்கிய மக்கள்!

கோவை: கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரிவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாதம் இந்து மதத்தில் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன் நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 29 ஆம் தேதி துவங்கி வருகிற 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் திருவுருவத்தை 10,008 வெள்ளி கண் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் மற்றொரு சிறப்பாக, அம்மனின் உருவப்படத்தில் உள்ள கண் வழியாக பார்க்கும் போது, கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனின் சிலை அருகில் தெரிவது போல் பைனாகுலர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடனும், பார்த்து தரிசித்து சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பயணிகள் ஆட்டோவில் சரக்கு செல்வதா? கோவை ஆட்டோ டிரைவர்கள் குமுறல்!

கோவையில் பயணிகள் ஆட்டோக்களில் வணிக சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுவதை கட்டுப்படுத்த கோரி சரக்கு ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.