கோவையில் அம்மன் உருவத்தை பைனாகுலரில் பார்த்து வணங்கிய மக்கள்!

கோவை: கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரிவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாதம் இந்து மதத்தில் ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன் நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 29 ஆம் தேதி துவங்கி வருகிற 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் திருவுருவத்தை 10,008 வெள்ளி கண் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் மற்றொரு சிறப்பாக, அம்மனின் உருவப்படத்தில் உள்ள கண் வழியாக பார்க்கும் போது, கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனின் சிலை அருகில் தெரிவது போல் பைனாகுலர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடனும், பார்த்து தரிசித்து சென்றனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...