கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின் படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களான கிழக்கு மண்டலத்தில் 87 எண்ணிக்கையிலும், மேற்கு மண்டலத்தில் 92 எண்ணிக்கையிலும், வடக்கு மண்டலத்தில் 84 எண்ணிக்கையிலும், தெற்கு மண்டலத்தில் 70 எண்ணிக்கையிலும், மத்திய மண்டலத்தில் 65 எண்ணிக்கையிலும் என ஐந்து மண்டலங்களிலும் பூங்காக்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணியில், மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றப்பட்டன. மேலும். பூங்காக்களில், பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கான நடைபயிற்சிக்கான நடைபாதை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்விளக்குகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் நிலை குறித்தும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

விவசாயக் கடன் தள்ளுபடி- பாதி அந்தரத்தில் தொங்கவிட்டது- கோவை விவசாயிகள் ஆதங்கம்

கோவை: விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளை பாதி அந்தரத்தில் தொங்கு விடுவது போன்று உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோவை சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு...

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.