கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின் படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களான கிழக்கு மண்டலத்தில் 87 எண்ணிக்கையிலும், மேற்கு மண்டலத்தில் 92 எண்ணிக்கையிலும், வடக்கு மண்டலத்தில் 84 எண்ணிக்கையிலும், தெற்கு மண்டலத்தில் 70 எண்ணிக்கையிலும், மத்திய மண்டலத்தில் 65 எண்ணிக்கையிலும் என ஐந்து மண்டலங்களிலும் பூங்காக்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணியில், மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றப்பட்டன. மேலும். பூங்காக்களில், பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கான நடைபயிற்சிக்கான நடைபாதை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்விளக்குகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் நிலை குறித்தும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


