கோவை: சூலூர் சிறுமி வழக்கில் கைதான இருவரிடமும் குற்ற பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை சூலூர் அருகே 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த மோகன்ராஜ் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை அடிப்படையில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செயப்பட்டு நேற்று இ ஃபைலிங் முறையில் கோவை உள்ள போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த குற்றப்பத்திரிக்கை நகல் கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதற்காக இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


