கோவை: உலமாக்களுக்கான வாகன மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கோயம்புத்தூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

