கோவை: கோவையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2A தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளி ஒரே ஒரு தேர்வு மையத்தில் இந்த தேர்வு நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் இந்த தேர்வை 332 தேர்வர்களும் பிற்பகல் நடைபெறும் தேர்வை 349 தேர்வுகளும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவே அனைவரின் உடமைகளும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் ஓரிரு தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

