கோவை அருகே சோகம்- குட்டையில் காருடன் மூழ்கிய வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…

கோவை: கோவை அருகே குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் கார் ஒன்று மூழ்கி கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்க முயற்சித்தனர். அப்போது காருக்கு நீரில் மூழ்கி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இரவில் வேகமாக வந்து வழி தெரியாமல் சாலை ஓரத்தில் இருந்த குட்டைக்குள் காருடன் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அரசு கலைக்கல்லூரியில் PG Admission; சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினரின் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது; 557 இடங்களுக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.