கோவை அருகே சோகம்- குட்டையில் காருடன் மூழ்கிய வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…

கோவை: கோவை அருகே குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் கார் ஒன்று மூழ்கி கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்க முயற்சித்தனர். அப்போது காருக்கு நீரில் மூழ்கி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் வேகமாக வந்து வழி தெரியாமல் சாலை ஓரத்தில் இருந்த குட்டைக்குள் காருடன் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் ரோஜ்கார் நிகழ்ச்சி…

கோவை: கோவை மத்திய அரசின் ரோஜ்கார் யோஜனா நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும்...

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...