விஜய்க்கு எதிராக சவால் விட்டு பிரசாந்த் ரங்கசாமி மொட்டை அடித்து கொண்டது போல் ரங்கராஜ் பாண்டேவும் சொன்னதை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொட்டை போட்ட பாண்டா
ஆரம்பத்தில் பிரசாந்த் ரங்கசாமி நடிகர் விஜய் குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, விஜயை விமர்சிக்கத் தொடங்கினார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றது.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே எக்ஸிட் போல் கணிப்புகள் விஜய்க்கு சாதகமாக இருந்ததால், பிரசாந்த் ரங்கசாமி மீண்டும் தனது அணுகுமுறையை மாற்றி, அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட ஆரம்பித்தார். இதன் பின்னணியில் அவர் முன்பு கூறிய ஒரு சவாலும் மீண்டும் பேசுபொருளானது.
சொன்னதை செய்வேன்
விஜய் பெரும்பான்மையை நிரூபித்தால் தலையை முழுமையாக களைந்துவிடுவேன் (மொட்டை போடுவேன்) என்று பிரசாந்த் ரங்கசாமி முன்பே கூறியிருந்தார். தேர்தல் முடிவில் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், அவரது கட்சி மொத்தமாக 108 இடங்களை கைப்பற்றி பெரிய அரசியல் வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து “இப்போது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா?” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில், “நான் சொன்னது சொன்னதுதான், அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன்” என்று கூறிய பிரசாந்த் ரங்கசாமி, தனது வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக அதே இரவே மொட்டை போட்டு, அதற்கான வீடியோவையும் வெளியிட்டார். இதனால் அவர் சொன்னதை நிறைவேற்றியவர் என்ற பெயரையும் பெற்றார்.
அப்போ பாண்டே?
இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் அவரை பாராட்டியதுடன், சிலர் நகைச்சுவையாக கலாய்த்தும் வருகின்றனர். குறிப்பாக சிலர், அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் முன்பு கூறிய வாக்குறுதிகளை நினைவூட்டியபடி ஒப்பிடுகின்றனர். “இனி விஜய்க்கு ஆதரவாக பேச ஆரம்பியுங்கள், ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும், பின்னர் பழகிவிடும்” என ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாமல், 108 இடங்களுடன் விஜயின் கட்சி முன்னிலையில் உள்ளது. எனவே, மற்ற கட்சிகளின் ஆதரவை பெற்று கூட்டணி அமைத்து அரசு அமைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விரைவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.



