கோவை: கோவையில் ஒரே இடத்தில் 108 பசுக்களை கொண்டு கோமாதா பூஜை நடைபெற்றது.
நமாமி கோமாதரம் எனும் கோமாதா பூஜை இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த பூஜையில் 108 பசுமாடுகள், கன்றுகுட்டிகள் அழைத்து வரப்பட்டு ஹோமங்கள் வளர்த்து பூஜை மேற்கொள்ளப்பட்டது.
விஸ்வ மங்களம், சமூகம் மற்றும் தேச நலனை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த கோமாதா பூஜையில் சிவாச்சாரியார்கள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், குருமார்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரவர்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொண்டனர்.

இதில் பொதுமக்கள் அனைவரும் பசுக்களுக்கும் கன்றுகுட்டிகளுக்கும் வாழைப்பழம், புண்ணாக்கு, அகத்திக்கீரை ஆகியவற்றை கொடுத்து வணங்கினர். மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


