கோவை: கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று (ஜூலை 3) கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Also Read: கோவையில் தவெக தொண்டர் அட்டூழியம்- அப்பாவி மீது தாக்குதல் பரபரப்பு வீடியோ
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நீரின் வேகமும் அதிகரித்துள்ளது.
VIDEO
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, இன்று ஒருநாள் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை மூடுவதாக போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.
Also Read: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி..
மேலும், பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மழையின் நிலை மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரடைந்ததும் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.


