அமுதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவார்களா? – தவெக அரசுக்கு திமுக கேள்வி

கோவை : கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலையைக் கண்டித்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள கல்லூரி அருகே திமுக மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தவெக அரசு மாணவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி தலைமை உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு தவெக அரசு சாதகமாக செயல்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Advertisement

மாணவர் கொலை தொடர்பாக முதலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிந்ததும் அடுத்தடுத்து 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அனிதா வீட்டிற்குச் சென்று தரையில் அமர்ந்தவர்கள், தற்போது 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும் அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை” என்று முதல்வரை விமர்சித்தார்.

Advertisement

மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாணவர் அமுதனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு முன்வருமா என்றும் வீரமணி கேள்வி எழுப்பினார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சுதந்திர தின விழா: கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு – விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை நடைபெறுகிறது.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...