சிலிண்டருக்கு பாடை கட்டி கோவையில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோவையில் த.வெ.க.,வினர் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2024 மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.

தொடர்ந்து, சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆகக் குறைந்தது. தொடர்ந்து வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.

இதனிடையே திடீரென சமையல் கேஸ் விலையை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், மானியம் வழங்குவதாகக் கூறி வழங்காத மாநில அரசைக் கண்டித்தும், கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு, த.வெ.க.,வினர் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recent News

குடும்ப தலைவிகளுக்கு 2000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் EPS…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட...

Video

Join WhatsApp