கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்- பள்ளி வாகனம் விபத்து…

கோவை: தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் பள்ளி வாகனம் விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் கணுவாய்- துடியலூர் சாலையில் AVANI PUBLIC பள்ளி தனியார் இயங்கி வருகிறது. வழக்கம் போல் பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி வாகனம் வரும் போது தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் எதிரே வந்ததாக தெரிகிறது. இளைஞர்கள் மீது மோதிவிட கூடாது என்பதற்காக பள்ளி வாகனத்தை ஓட்டுனர் திருப்பி உள்ளார்.

அதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளி வாகனம் அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள், ஓட்டுனர், அந்த இளைஞர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை வாகனத்தில் இருந்து வெளியேற்றி அப்பள்ளிக்கு தகவல் அளித்தனர். பின்னர் பள்ளியில் இருந்து மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

இது குறித்து தடாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கைவினை கலைஞர்களுக்கு மானியம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: கைவினை கலைஞர் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கைவினை...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.