சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் 3 குட்டிகளுடன் கோவை மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சி 21-வது வார்டில் குடியிருப்பு பகுதிக்குள் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
கோவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் குறித்து அமைச்சர் ராஜ்குமார் ஆய்வு நடத்தி, பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
உலமாக்களுக்கு ரூ.50,000 வரை இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 15, 2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.