பைக் விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (20). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பரான ஜபருல்லா (24) என்பவருடன் நேற்று பைக்கில் குனியமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜபருல்லா பைக்கை ஓட்டிய நிலையில், சம்சுதீன் பின்னால் அமர்ந்திருந்தார்.

Advertisement

ஆத்துப்பாலம் அருகே வந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சம்சுதீன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்சுதீன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த ஜபருல்லாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபத்து- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன்...