அண்ணாமலைக்கு தோல்வி உறுதி- அமைச்சர் அருண்ராஜ் கோவையில் பேட்டி…

கோவை: அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்
மக்கள் தீர்ப்பினை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் திமுக பேசிக் கொண்டே இருந்தால் திமுக நன்றாக இருக்கும், தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என்றார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மிக குறைவு என்றும் பயிற்சி மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள் ஆகியோர் இருப்பதாகவும் கூறிய அவர் அதே சமயம் செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது என்றார். கூடிய விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

90 நிமிடங்களில் 430க்கும் மேற்பட்ட திட்டங்களை அமைச்சரவை எப்படி ஆலோசித்தது குறித்தான கேள்விக்கு, தமிழ்நாட்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் 436 திட்டங்கள் குறித்து விரிவான கையேடு கொடுத்து இருப்பதாகவும் ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் பேசவில்லை, நீண்ட கால திட்டங்கள் குறித்த விரிவான பார்வை கொடுத்துள்ளனர்
436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசிக்க முடியாது, திட்டங்களுக்கான விவரங்கள் கையேடுகளில் இருக்கிறது,
அதை பார்த்து எப்படி செய்ய வேண்டும் என சொல்லி இருக்கின்றோம் என்றார்.

Advertisement

அதிமுகவை தாய் இயக்கம் என்று ஆதவ் கூறியதற்கு அதிமுக மட்டுமல்ல பல்வேறு கட்சிகளில் இருந்து தவெகவிற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகின்றனர் ,அதிமுகவை பொறுத்தவரை ஏன் தவெகவிற்கு வருகின்றனர் என்றால், 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கின்றனர் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடுத்த முடிவுகள் தவறாகத் தான் போயிருக்கின்றது , 2026 தேர்தலில் பாஜகவுடன் இணைந்தார்கள் , அதன் பின்பு திமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைக்க வேண்டும் என நினைத்தது சிறந்த முடிவு, இதை எதிர்த்து தான் அனைவரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். மேலும் கூடிய விரைவில் அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கும் என பார்க்கத்தான் போகிறார்கள் என்றார்.

தமிழகத்துக்கு ஒதுக்கிய இடங்கள் கட் ஆப் அதிகமாக இருப்பதால் அதை நிரப்ப முடியவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு திருப்பி கொடுக்க பட்ட இடங்கள் கட் ஆப் குறைக்கப்பட்டு நிரப்பப்பட்டது, அதை தமிழக அரசே செய்திருக்கலாம் என்று கூறிய அவர் கட் ஆப் குறைக்கக்கூடிய அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்தால் நாமே அதை குறைத்து நிரப்பி இருக்க முடியும் , இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீடுக்காக அணுகி இருக்கிறோம், கூடிய விரைவில் நல்ல முடிவு வரும் என நினைக்கிறோம் என தெரிவித்தார்.

மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்து அடுத்த வாரம் அனைத்து மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் இணை இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்குவது தொடர்பான கேள்விக்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்ற அவர் எந்த கறை வேண்டுமானாலும் மக்கள் விட்டு விடுவார்கள், ஆனால் பாஜக கறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பாஜக பல இடங்களில் முயற்சி செய்து தோற்று இருக்கிறார்கள், இப்பொழுது புதிய முயற்சி எடுத்து இருக்கிறார்கள் என்றார். மேலும் ஹிட்டான படம் ரீ ரிலீஸ் ஆனாலே வரமாட்டார்கள் ,
ஒரு சிலரது படம் மட்டும்தான் பார்க்க வருவார்கள், ஏற்கனவே பலமுறை பிளாப் ஆன படம் இது(பாஜக) , மக்களிடம் எப்படி எடுபடும் என தெரியவில்லை, எனவே தோல்வி நிச்சயம் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.