நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை எதிர்நீச்சல் சீரியல் நடிகை நேரில் சந்தித்துள்ள போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் புதிய அவதாரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய், தனது திரைபயண வெற்றிகளைத் தொடர்ந்து அரசியலிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
2024ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி, தமிழக அரசியல் சூழலில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிட்டுள்ளதால், அதன் முடிவுகளை அறிய ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்தது.
குறிப்பாக, மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆன்மிக பயணம்
இதனைத் தொடர்ந்து, ஆன்மீக நம்பிக்கையுடன் விஜய் பல்வேறு கோவில்களுக்கு சென்றார். முதலில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட அவர், பின்னர் மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில் சென்றார்.

அங்கு விஜய்யை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அந்த பகுதி பெரும் பரபரப்பானது. இந்த தருணத்தில் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
விஜய்யுடன் கனிகா சந்திப்பு
பிரபல நடிகையான கனிகா தனது குடும்பத்துடன் சீரடி கோவிலுக்கு வந்திருந்தபோது, விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் அன்புடன் உரையாடி, நினைவாக ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய்யுடன் இணைந்து எந்த படத்திலும் நடித்ததில்லை, ஆனால் இன்று அவரை நேரில் பார்த்தது உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணமாக இருந்தது. பாதுகாப்பு பணியாளர்கள் அவரை விரைவாக அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தாலும், அவர் ஒரு நொடிக்கு நின்று, கவனித்து, சில எளிய மற்றும் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்தார் என கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் ஈஸ்வரி
குறிப்பாக, கனிகா சிறிய திரையிலும் பெரிய வரவேற்பைப் பெற்றவர். எதிர்நீச்சல் என்ற சீரியலில் ‘ஈஸ்வரி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால், அந்த தொடரிலிருந்து திடீரென விலகியிருந்தார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஜய் அரசியல் பயணமும், அவரது ஆன்மீக தரிசனங்களும், பிரபலங்களுடன் நிகழும் எதிர்பாராத சந்திப்புகளும் இணைந்து, அவரைச் சுற்றியுள்ள கவனத்தை மேலும் அதிகரித்துள்ளன. மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள், அவரது அரசியல் எதிர்காலத்தை எந்த திசையில் நகர்த்தும் என்பது ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் ஆர்வத்துடன் கவனித்து வரும் முக்கிய அம்சமாகும்.


