குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் தேவையில்லை என சமீபத்தில் திவ்யா சத்யராஜ் கூறிய நிலையில், தற்போது பிரபல நடிகையும் அதே கருத்தை பதிவு செய்துள்ளார்.
அறிவியலின் உச்சக்கட்ட வளர்ச்சி
காலம் மாற மாற அறிவியல் உலகம் உச்சக்கட்ட வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் பலர், அறிவியல் முறை மூலம் சில மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அதில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளாமல் தம்பதிகள் பலர் குழந்தையை பெற்றுவருகின்றனர்.

இந்த அறிவியல் மருத்துவ முறைகள்தான் தற்போது சினிமாத்துறையில் ஹாட் டாபிக்காக உள்ளது. காரணம், சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பேசியதுதான்.
சர்ச்சையில் சிக்கிய திவ்யா சத்யராஜ்
எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை. திருமணம் செய்தாலும், அவரவர் வீட்டில் தனியாக வாழலாம், இணைந்திருப்பதுதான் திருமண வாழ்க்கை என்பதில்லை. மனம் ஒத்துப்போனால் போதும்.

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் எந்த தவறும் இல்லை, தாலிக்கட்டாமல் திருமணம் செய்யாடமமல் ஒருவரை ஒருவர் புரிந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
திவ்யா சத்யராஜ் கருத்துக்கு அவரது தந்தையும் நடிகருமான சத்யராஜ் ஆதரவாக கருத்தையே தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவும் எழுந்தன.
நித்யா மேனனின் திடீர் ஆசை
இதே போன்று, திருமணம், குடும்பம் மற்றும் தாய்மை குறித்து சமூகத்தில் நிலவும் பாரம்பரியக் கருத்துக்களுக்கு மாறாக ஒரு விவாதத்தை தூண்டும் வகையில் பிரபல நடிகை நித்யா மேனன் தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

37 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தனது விருப்பப்படி முன்னெடுத்து வருகிறார்.
நடிகையின் கருத்துக்கு எதிர்ப்பு
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “குழந்தை வேண்டும் என்பதற்காக கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும், நவீன அறிவியல் வளர்ச்சியால், திருமணம் இல்லாமலேயே பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு முறைகள் இன்று கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற வழிகளைப் பயன்படுத்தி ஏற்கனவே பலரும் பெற்றோராகி உள்ளனர் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

நித்யா மேனனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது கருத்தை முன்னேற்றமான சிந்தனையாக பாராட்டினாலும், மற்றொருபக்கம் பலர் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, இதற்கு முன்பு இதேபோன்ற கருத்தை வெளியிட்ட திவ்யா சத்யராஜ் மீது எழுந்த சர்ச்சையைப் போலவே, இப்போது நித்யா மேனனும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.


