கோவை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு மீன்பிடி குத்தகைக்கு விடமின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடவும். இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒப்பந்தபுள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் [19494/F3/2024-3] [2026_AHDF_679379_1] உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளி ஜீன் 18ம் தேதி அன்று காலை 9.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு Inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பியும் அல்லது ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் எனவும்
கூடுதல் தகவலுக்கு உதவி இயக்குநர், அலுவலகம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 7வது தளம் ஈரோடு-638 011 0424-2221912 தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்


