கோவை: முதலமைச்சர் விஜய்யின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு கோவை எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் விஜய் அறிவித்துள்ள “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” சமூக நீதி மற்றும் குழந்தைகள் நலனை முன்னிறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத் திட்டமாகும் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் பிறப்பை கொண்டாடும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்திற்கு அரசு துணை நிற்கும் மனிதநேய அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
Also Read: கோவையில் ஆண் யானை மர்ம மரணம்!
மேலும், சமூக அக்கறை மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியின் மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் திகழும் என்றும், தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கிய அரசின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துவதாகவும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.



