அடடே… நோட் பண்ணுங்கப்பா… காதல் குறித்து மிருணாள் தாக்கூர் உருக்கமான பேட்டி…

சென்னை: நீங்கள் காதல் வயப்பட்டு விட்டால் அவரிடம் சரணடைந்து விடுங்கள் என்று நடிகை மிருணாள் தாக்கூர் உருக்கமாக தெரிவித்துள்ளார்

மிருணாள் தாக்கூர் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் சீதாராமம் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. ரொமான்டிக் ஹிட் அடித்த இந்த படத்தைத் தொடர்ந்து, இந்த ஜோடியும் நாடு முழுவதும் பிரபலமானது.

Mrunal Thakur

இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் இசையில், அவரது மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய Bheegi… Bheegi… ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.

இதுவும் காதலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. விண்டேஜ் ஸ்டைலில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த பாடலை இங்கு காணலாம்

Advertisement

இந்தப் பாடலுக்கான பிரமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அத்தகைய பிரமோஷன் பேட்டி ஒன்றில் மிருணாள் தாக்கூர் காதலைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

என்னைப் பொறுத்தவரை காதல் என்பது மிக அழகான ஒரு உணர்வு. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட காதல் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Mrunal Thakur hot photos

இந்த பூமியில் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்றுதான் காதல். காதலின் வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் காதல் மாறுவதே கிடையாது.

சில நேரங்களில் காதலில் சிலவற்றை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நான் ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்

Mrunal Thakur hot photos

நீங்கள் காதலில் இருப்பவராக இருந்தால் கொடுப்பவராக இருங்கள். இதற்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை. அவர்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.

Mrunal Thakur

இவ்வாறு காதலைப் பற்றி மிருணாள் தாக்கூர் உருக்கமாக பேசியுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. V (Especially Boyz) Should be ready to Give/Sacrifice Everything . Even our Love Lasts more than 6 years and if she tells i want to marry some1 who is been fixed by parents (Drama) and myself.

    They (Girls) Prefer a person who is wealthy and not the Person who will do anything for her (Love) They will Stop at one when their expectations gonna 2 happen, without the guilty of Cheating him in the name of love and the huddles he face in his life bcoz of being cheated. ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மருத்துவமனையில் நடிகை விசித்ரா அனுமதி… என்ன ஆச்சு? பரபரப்பு அறிக்கை!

நடிகை விசித்ரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ரசிகர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கின்றனர்

Video

கவுண்டம்பாளையம் அருகே காவலரின் மிரட்டல் வீடியோ வைரல்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே அபராத விவகாரத்தில் காவலர் மிரட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp