கோவையில் நார்மல் பெட்ரோல் தட்டுப்பாடு?வாகன ஓட்டிகள் அவதி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சில பெட்ரோல் பங்குகளில் நார்மல் பெட்ரோல் இருப்பு குறைந்து, சில இடங்களில் முழுமையாக தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நார்மல் பெட்ரோல் லோடு வருவதில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நார்மல் பெட்ரோலுக்கு பதிலாக லிட்டருக்கு சுமார் ரூ.9 அதிக விலை கொண்ட பவர் பெட்ரோலை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், தற்போது பவர் பெட்ரோல் இருப்பும் படிப்படியாக குறைந்து வருவதாக பெட்ரோல் பங்க் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பெல்லாம் நார்மல் மற்றும் பவர் பெட்ரோல் இரண்டிற்கும் லோடு பதிவு செய்தால் அதே நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

Advertisement

ஆனால் தற்போது நார்மல் பெட்ரோல் லோடு வருவதில் நான்கு நாட்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டு வருவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை நீடித்தால், வாகன ஓட்டிகள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி

டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டிய மர்ம நபர்களை நம்பிய 58 வயது பெண், ரூ.18 லட்சத்தை இழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.