ரஜினியிடம் முதிர்ச்சி தெரிகிறது: சந்திப்புக்குப் பின் வைரமுத்து கவிதை

சென்னை: தன்னை ரஜினி சந்திக்க வந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்

‘பாசமுள்ள மனிதனப்பா – நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்

வியப்புக்குரிய மனிதர்தான்

Advertisement

அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது

உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது

எங்கள் நூறு நிமிட
உரையாடலை
‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை

தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்

ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின

வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்

அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்

2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்

அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை

‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’

என் தமிழ்
பொய்யாகவில்லை

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மருத்துவமனையில் நடிகை விசித்ரா அனுமதி… என்ன ஆச்சு? பரபரப்பு அறிக்கை!

நடிகை விசித்ரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ரசிகர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கின்றனர்

Video

ஆட்டோ பாகங்களை ஆட்டோவில் வந்து திருடிய கும்பல்- கோவையில் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp