கோவை: கோவையில் நடைபெற்று வரும் மனநல மருத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை மற்றும் கோயம்புத்தூர் சைக்காட்ரி சொசைட்டி சார்பில், மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மனநல மருத்துவத்துறைத் தலைவர் சையது உமர் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி கருத்தரங்கில் வெவ்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளைச் சேர்ந்த மனநல மருத்துவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.
போட்டி

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. மார்ச் 15-ம் தேதி மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இதுகுறித்து பிஎஸ்ஜி மருத்துவமனை மனநல மருத்துவர் ஆனந்த் கூறுகையில்,
மருத்துவத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி வருகிறோம். இதில் 10 தலைப்புகளின் கீழ் துறை நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

வினாடி வினா மற்றும் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பு நிகழ்வுகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த கருத்தரங்கு மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
PSG mental health seminar

