கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்படுவது தொடர்பான மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகவோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை இட்டுச்செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

