கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறி இருந்த நிலையில் நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது.மேலும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
அதன்படி எங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடம் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
அந்த விவரம் பின்வருமாறு:-
கோவை விமான நிலையம் சுற்று வட்டாரப் பகுதிகள் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர்,
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர், போத்தனூர் ரயில் நிலைய சுற்று வட்டார பகுதிகளில் ஜீரோ புள்ளி 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர்,
ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



