மின்கம்பிகளை தொட்டால் உடனே மின்தடை… யானைகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்

கோவை: காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே கடந்த 8-ஆம் தேதி மின்கம்பியை தொட்ட காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மின்வாரியம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வன எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் சுமார் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு வன எல்லைப் பகுதிகளில் உள்ள மின்கம்பிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பணிகள் தொடங்கும்” என்றனர்.

Advertisement

அதன்படி, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தப்பட உள்ளன. இந்த உரைகள் ஒன்றோடு ஒன்று இணையும் வகையில் அமைக்கப்படுவதால், வனவிலங்குகள் மின்கம்பிகளை தொட்டாலும் மின்சாரம் தாக்குவதை தடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு யானை வழித்தடத்தில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை அடிப்படையில் இந்த பாதுகாப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள துணை வழித்தடங்களிலும் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும், யானைகள் செல்லும் பாதைகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. யானைகள் மின்கம்பிகளை தொட்டவுடன் தானாக மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் மின்விபத்தில் சிக்காமல் இருக்க மின்மாற்றிகளை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கோவை வன எல்லைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விரட்டும் நாய்கள்; கோவையில் நடுக்கத்தை ஏற்படுத்தும் சி.சி.டி.வி. காட்சிகள்!

கோவையில் சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் ஆக்ரோஷமாக துரத்திய சி.சி.டி.வி காட்சி வைரல்; சிறுமியை துரத்திய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...