நெகமம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு – போலீசார் தீவிர விசாரணை

கோவை: நெகமம் அருகே தோட்டப் பகுதியில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த என்.சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது தோட்டம் அருகே மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Click here to Read news: கோவில்மேடு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

Advertisement

தகவலின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், கோமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனன் மற்றும் தடய அறிவியல் நிபுணர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கிடந்த மனித எலும்புக்கூடுகளை போலீசார் கைப்பற்றி, மேலான பரிசோதனைக்காக கோவை சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு உயிரிழந்தார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.