கோவை: கோவையில் அடுமனை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வருகிற 16.06.2026 மற்றும் 17.06.2026 தேதிகளில் நடைபெறுகிறது. அடுமனை உணவுப் பொருட்களுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது.
அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது அடுமனைப் பொருட்கள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் ரொட்டி வகைகள்,ப்கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1500 + GST 18%) செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி நடைபெறும் இடம்:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்-641 003
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641003.
அலைபேசி எண் 9488518268 மின்னஞ்சல் : phte@tnau.ac.in ஆகும்.


