ரத்த தானம் செய்த ஹவிஷா மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள்!

கோவை: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவை ஹவிஷா மருத்துவமனையின் மருத்துவர்களும் பொதுமக்களும் இன்று ரத்த தானம் செய்தனர்.

Advertisement

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வலர்கள் பலர் உலகம் முழுவதும் ரத்த தானம் செய்தும், இதன் அவசியம் குறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சிங்காநல்லூரில் உள்ள ஹவிஷா மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் அம்மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்த தானம் என்றால் முதலில் தானம் செய்ய வேண்டியது மருத்துவர்கள்தான் என்பதை உணர்த்தும் விதமாக, இன்று மருத்துவமனையின் பணியாளர்கள் அனைவரும் தங்களது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement
Havisha Hospital Blood Donation Camp Coimbatore

இதுகுறித்து ஹவிஷா மருத்துவமனையின் மருத்துவர்கள் ஹரிஹர ஜோதி மற்றும் நிஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். சிரமத்தில் இருக்கும் பொதுமக்களின் நலனுக்காக எங்கள் குழுவினரே ரத்த தானம் செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.

Advertisement

ரத்த தானம் செய்தால் சத்து குறைந்துவிடும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் ஒரு யூனிட் ரத்தம் மட்டுமே தானமாக வழங்கப்படுகிறது. ரத்த தானம் செய்த பிறகு மீண்டும் ரத்தம் சுரக்கும். அதனால் அச்சப்படத் தேவையில்லை. உலகில் மிக முக்கியமான தானங்களில் ஒன்று ரத்த தானம். ஒரு உயிரைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு” என்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...