பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை: டிரைவர், கண்டக்டர் கைது – கோவையில் பரபரப்பு

கோவை: பஸ்களுக்கு இடையேயான நேர இடைவெளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மற்றொரு தனியார் பஸ்சின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண் (26). இவர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ம் தேதி மாலை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே சரண் பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, மற்றொரு தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டருடன், பஸ்களுக்கு இடையேயான நேர இடைவெளி தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சரண் ஓட்டி வந்த பஸ்சின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து சரண் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்கள் என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த இளங்கோ (21) மற்றும் கணபதி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (29) என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“நீ வேறு சாதி… நான் வேறு சாதி” – கணவர் குடும்பத்தினர் மீது புதுப்பெண் பரபரப்பு புகார்!

5 ஆண்டுகள் காதலித்து திருமணம்: சாதியை காரணம் காட்டி கணவர் குடும்பத்தினர் மிரட்டுவதாக கோவை புதுப்பெண் புகார் அளித்துள்ளார்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...