கோவை மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்… அமைச்சர் சம்பத் குமார் அழைப்பு!

கோவை: கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் குமார், மாவட்டத்தில் 1,615 மையங்களில் இம்முகாம் நடைபெறுவதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு 3.01 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் இம்முகாமை முதலவர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் இம்முகாமைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

sambathkumar tvk minister

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,124 மையங்களிலும், நகர்ப்புறங்களில் 491 மையங்களிலும் என மொத்தம் 1,615 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 32 இடங்களிலும், 222 நடமாடும் குழுக்கள் மூலமும் இம்முகாம் நடத்தப்படுகிறது.

Advertisement

Also Read: கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெற வேண்டும்” என்றார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வருவாய்த்துறையில் வெள்ளை அறிக்கையே இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்…

கோவை: வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை என்றும் அந்த துறை நன்றாக செயல்பட்டு வருவராக...

Latest News Coimbatore

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.