கோவை: கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் கீழ் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிக்காக ஒரு குழுவும், மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்காக தலா ஒரு குழுவும் என மொத்தம் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தலைமையில் இரண்டு பெண் காவலர்கள் பணியாற்ற உள்ளனர். இதற்காக 3 ரோந்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பொது இடங்களிலும், இணைய வழியிலும் நடைபெறும் குற்றங்களை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Public ku poga sollunga sir