கோவை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்ட சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச் செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன்விவரக் குறிப்புஉரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 19.06.2026-குள் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


