கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கோவை மாவட்ட சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லாவிருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரசாகச் செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன்விவரக் குறிப்புஉரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 19.06.2026-குள் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் துவங்கியது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி…

கோவை: கோவையில் 16வது தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் துவங்கியது. தேசிய அளவிலான 16வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று முதல்...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...