ராமநாதபுரத்தில் பயங்கரம்: கேஸ் கசிவால் வீட்டில் தீ – 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

கோவை: கோவை ராமநாதபுரம் அருகே சமையல் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயமடைந்தனர்.

Advertisement

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (35). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு சாய் மித்ரன் (4) என்ற மகனும், சாய் ஸ்ரீ (1½) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை மகேஸ்வரி குடும்பத்தினருக்காக டீ தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது சமையல் கேஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த குழாயில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் கேஸ் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் மகேஸ்வரி கேஸ் அடுப்பைப் பற்றவைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் தீப்பற்றி பயங்கரமாக எரிந்தது. இந்த தீ விபத்தில் மகேஸ்வரி, அவரது கணவர் விக்னேஷ்குமார் மற்றும் குழந்தைகள் சாய் மித்ரன், சாய் ஸ்ரீ ஆகிய 4 பேரும் தீக்காயமடைந்து அலறினர்.

Advertisement

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

காலை நேரத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அமுதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவார்களா? – தவெக அரசுக்கு திமுக கேள்வி

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலையை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வீரமணி அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...