“காயமடைந்த முதியவர் மீது காலால் எட்டி உதைத்து… தண்ணீர் ஊற்றி விரட்டிய கொடூரம்!” – கோவை அரசு மருத்துவமனை முன் அதிர்ச்சி

கோவை: கோவை அரசு மருத்துவமனை முன் காயத்துடன் உதவி கேட்ட முதிய யாசகரை ஒருவர் தாக்கி, தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த முதிய யாசகரை ஒருவர் காலால் எட்டி உதைத்து, கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்ற முதியவர், வறுமை காரணமாக சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலில் காயத்துடன் உணவு மற்றும் உதவி தேடி கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நடைபாதைக்கு வந்துள்ளார். அங்கு பொதுமக்களிடம் உதவி கேட்டு சென்றபோது, அங்கிருந்த ஒருவர் அவரிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

காயத்துடன் உதவி கேட்ட முதியவரை அந்த நபர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து விரட்டியதாகவும் தெரிகிறது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பசியாலும் காயத்தின் வலியாலும் அவதிப்பட்டு உதவி கேட்ட முதியவரிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்களும், நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Update:-
News Clouds Coimbatore செய்தியின் எதிரொலியாக சமூக ஆர்வலர்கள் சிலர் முதியவரை மீட்டனர். ஆனால், சிகிச்சைக்கு முன்பே முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சுக்கு காபி குடித்த தொழிலாளி உயிரிழப்பு!

சுக்கு காபி குடித்துவிட்டு படுத்த கூலித் தொழிலாளி மயங்கி உயிரிழந்த சம்பவம் கோவை சின்ன சௌரிபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீளமேடு போலீசார் விசாரணை.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...