கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ரங்கநாயகி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 29வது வார்டுக்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியும்,
வி.என்.எஸ். நகர் பகுதியில் மாநகராட்சி நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்பக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதேபோல், கொரத்தோட்டம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்பக் கட்டும் பணி, கணபதி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி,
வி.என்.எஸ். நகர் முதல் சின்னசாமி நகர் வரையிலும் மற்றும் வி.என்.எஸ். நகர் இடையே கால்வாயின் குறுக்கேயும் ரூ.39.70 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நேற்று மேயர் ரங்கநாயகி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



